Friday, February 6, 2009

திருமணம் செய்து கொள்ள முன் இதை வாசியுங்கள்

நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2: உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக இப்படியொரு வழமை காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

***

நபர் 1 : காதல் திருமணம் சிறந்ததா பேச்சுத் திருமணம் சிறந்ததா என்று பட்டிமன்றத்திற்குப் பெயர் வைப்பதற்குப் பதிலாக இப்படியும் வைக்கலாம்.

நபர் 2: எப்படி?

நபர் 1 : தற்கொலை செய்வது சிறந்ததா? கொலை செய்யப்படுவது சிறந்ததா?

***

நபர் 1 : ebanking ஐ விட வேகமாகப் பணத்தை பரிமாறக் கூடிய வழி எது தெரியுமா?

நபர் 2 : தெரியாது

நபர்1 : திருமணம் செய்து கொள்வது

***

நபர் 1 : ஒரே தடவையில் இரண்டு திருமணங்களைச் செய்வது ஏன் சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது?

நபர்2 : ஒரே குற்றத்திற்கு 2 முறை தண்டனை வளங்குவதற்கு சட்டத்தில் இடமில்லாதபடியால்

7 comments:

எட்வின் said...

இரண்டாவது
//தற்கொலை செய்வது சிறந்ததா? கொலை செய்யப்படுவது சிறந்ததா?//
நன்னா இருக்குங்க...

Poorayam said...

நன்றிங்க

யூர்கன் க்ருகியர் said...

நல்ல தமாசு!

RAMASUBRAMANIA SHARMA said...

இது காமெடிதான...அய்யா வீட்ல இத படிக்கமாட்டாகளா...

தமிழ். சரவணன் said...

இப்பல்லாம் கல்யாணம் பண்ணுரதுக்கு முன்னாடி முன்ஜாமின் எடுத்து வச்சுக்கனும் இல்லாட்டி சினிமாவுக்கு கூட்டிட்டு போகலான்னா கூட் வரதட்சணை கொடுமை கேசு போட்டுவாங்க....

Poorayam said...

வணக்கம் ராமகிருஸ்ண சர்மா!
அட நீங்களே நம்ம வீட்டிலை போட்டுக் குடுத்துடுவீங்க போல இருக்குதே.

Poorayam said...

வணக்கம் தமிழ் சரவணன்
அதுக்காகத் தான் நாங்க ஆணடிமைத் தன ஒழிப்பு ச்ஙகத்தை ஆரம்பிக்க இருக்கிறோம். நீங்களும் இணைந்து கொள்கிறீர்களா?

Post a Comment